கூரிய ஆயுதங்களால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்துக்காக 8 பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று (27) மரண தண்டனை விதித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதிகளில் களுத்துறை தெற்கு, கலீல் பிளேஸைச் சேர்ந்த சேயர் மொஹமட் மொஹமட் பாரிஸ் என்பவர் கொல்லப்பட்டமை தொடர்பில் 8 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
அதற்கமைய, வழக்கு விசாரணையின் பின்னர், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.