Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்து விலை மீண்டும் அதிகரிக்குமாம்

சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்குமாம்

இந்த வாரம் சீமெந்து மூடை ஒன்றின் விலையை மேலும் 400 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக, மூன்று மாதங்களுக்கு சகல கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக் கொள்வதாக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு மூடை சீமெந்தை 25 நாட்களுக்கு மட்டுமே சேமித்து வைக்கலாம் எனவும், இவ்வாறு கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துவதன் மூலம் சந்தையில் உள்ள சீமெந்தை காலிமுகத்திடலில் வீச நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சீமெந்து விலையை இவ்வாறு அதிகரிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles