Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்

உயர்தர பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம்

இவ் வருடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கும் யோசனைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க முன்மொழிந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடத்தப்படலாம்.

அதன்படி, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் வெளியிடலம், அடுத்த வருட உயர்தரப் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் வழக்கம்போல நடத்தப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன முன்மொழிந்துள்ளார்.

இந் நிலையில் இந்த யோசனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles