Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்படுகின்றன

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இன்று (14) முதல் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 05 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த 04ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles