Monday, August 4, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் இலங்கையர் கைது

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் இலங்கையர் கைது

சிங்கப்பூரின் – கட்ரோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்ரோங்கில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த பெண்ணின் சடலம் இன்று (11) கண்டெடுக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெட்டுக் காயங்களுடன் ஹோட்டலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரி (வயது 32) என்ற பெண்ணே உயிரிழந்ததுடன், அவரது 30 வயதுடைய கணவரான இஷான் தாரக கொடகே என்ற சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் அவரை ஒருவாரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles