அமெரிக்காவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் 12 வயதுடையவர் எனவும், சந்தேக நபரான ஆசிரியை 4 ஆம் தர மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆசிரியை மாணவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி அவர்களை பாலியல் ரீதியில் ஈடுபட தூண்ட முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.