எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், சீமெந்து விலையையும் அதிகரிக்க சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதனை சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
சந்தையில் தற்போது 50 கிலோ சீமெந்து மூடை 2300 – 2350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால், புதிய சீமெந்தின் விலையை 500 – 600 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீமெந்து விலை அதிகரிப்பால் சந்தையில் கேள்வி குறைந்துள்ளதாகவும், கட்டட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீமெந்து விற்பனையார்கள் தெரிவிக்கின்றனர்.