யுக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், யுக்ரேனில் மரியபோல் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்கின்றன.
அதற்கமைய, யுக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் பெறுமதியான யுத்த உபகரணங்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போர் உலகப் பொருளாதாரத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.