இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் இந்த விலை அதிகரிப்பு இடம்பெறும் சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கையிருப்பில் உள்ள பால்மா காலாவதியாகியுள்ளதால், அடுத்த வாரம் பால்மா இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த வாரம் பால்மா இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், அதற்கான விலை திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு விலை அறிவிக்கப்படும்.