எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இதுவரையில் 4% ஆக இருந்த கூட்டுத்தாபனத்தின் நிகர இலாபம் 6% ஆக அதிகரித்துள்ளதாக எரிபொருள், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த இலாபத்தைப் பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஓகஸ்ட் காலப்பகுதிக்குள் கூட்டுத்தாபனம் 96 பில்லியன் ரூபா நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் 110 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மூன்று மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகளை அதிகரிப்பதன் மூலம் கூட்டுத்தாபனம் அதீத லாபத்தை ஈட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.