Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருவரை தாக்கி கொலை செய்த நபர் கைது

ஒருவரை தாக்கி கொலை செய்த நபர் கைது

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று (30) அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய நபர், தலைமறைவாகி இருந்த நிலையில் லிந்துலை- நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles