Sunday, September 14, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (29) புதுக்கடை, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

ராஜன் ராஜகுமாரி என்ற பதுளை, தேமோதரையைச் சேர்ந்த பெண், ராஜகிரிய பகுதியில் நடிகை சுதர்மா நெத்திகுமாரவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

நகை ஒன்று காணாமல் போன குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்காக அவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles