பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் இடம்பெற்ற இரதபவணியில் அதியுயர் மின்சாரத்தை கடத்தும் போது மின்சார் தாக்கி இருவர் உயிரிழந்துடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம் மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 27 மற்றும் 37 வயதுடைய பூட்டாவத்தை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் காயமடைந்த 30, 57 மற்றும் 43 வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.