பயணிகளுக்கு இடையூறு இன்றி ரயில்களை இன்று (24) இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (23) பிற்பகல், ரயில் கட்டுப்பாட்டாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ரயில் மின்சார உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழில் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
இதன் காரணமாக நேற்றிரவு அனைத்து ரயில் பாதைகளிலும் ரயில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாகவும், இன்று சிறந்த முறையில் ரயில்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.