இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழிற்சங்கவியலாளர்களின் கூட்டு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
07 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவப் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.