கிரிபத்கொட -தலுகம பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 202 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண – வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெல்லம்பிட்டிய – கொட்டுவில, களனி நதீகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகரான திப்பிட்டிகொட கல்ப தரங்கவின் உதவியாளர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.