நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவெனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
12 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்கு காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரிவெனாவுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.