Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலாவெளி புறாத்தீவை பார்வையிட மீண்டும் வாய்ப்பு

நிலாவெளி புறாத்தீவை பார்வையிட மீண்டும் வாய்ப்பு

திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறாத்தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நேற்று (19) முதல் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருகோணமலை இயற்கை துறைமுகம், நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகளை பார்வையிட பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் கப்பல் வசதிகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles