நீர் தேக்கங்களின் தரம் குறைந்துள்ளதால், குடிநீரை வழங்கும் போது நீரின் தரம் குறித்து தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது இதனை தெரிவித்தார்.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கான தேவையும் அதிகரித்துள்ளாதாக அவர் மேலும் தெரிவித்தார்.