அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியல் சீ ஃபிக், எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அவர் அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு, இணையவெளி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன குறித்து கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.