கொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை (17) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 02.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.