Saturday, September 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை (17) காலை 08.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 02.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles