பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பாலியல் தகவல்களை இணையத்தில் பெற்றமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் நேற்று (16) கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.