தென் மாகாணத்தில் குடிநீர் பிரச்சினை மோசமடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மிகவும் வரட்சியான காலநிலை காரணமாக, தெற்கில் தங்காலை, பெலியத்த உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அந்தந்த பகுதிகளுக்கு தண்ணீர் பௌசர்கள் மூலம் தண்ணீரை விநியோகிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.