Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளைஞன் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

இளைஞன் சுட்டுக்கொலை: ஒருவர் கைது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, லெல்லமவில் இளைஞன் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கெஹெலல்ல, படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றத்தைச் செய்வதற்கு முன் திட்டமிட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரிடமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (15) நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles