நகர அபிவிருத்தி சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த 11 திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 2531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக இந்நாட்டு மக்கள் நன்மைகளை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.