Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅறிவிக்காது வெளிநாடு சென்ற வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

அறிவிக்காது வெளிநாடு சென்ற வைத்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்தார்.

வைத்தியர் ஒருவர் வெளிநாட்டில் நிபுணத்துவப் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்த பின்னர், குறைந்தது 8 வருடங்கள் இலங்கையில் பணியாற்றுவதே வழமையான நடைமுறையாகும்.

விசேட வைத்தியர் ஒருவரை பயிற்றுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு 12 முதல் 15 மில்லியன் ரூபா வரை செலவாகிறதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles