இரகசிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருகொடவத்தை போக்குவரத்து விளக்கிற்கு அருகில் நின்று கொண்டிருந்த போது ஆதுருப்புவீதிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளை பரிசோதித்த போது, அவரிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐஸ் போதைபொருளை பாவிக்கும் பழக்கம் உள்ளவரா என்பதை கண்டறிய அவர் மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.