சைக்கிள் ஓட்டப் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார்.
மினுவாங்கொட ஹீனட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் வல்பிட்ட பிரதேசத்தில் சைக்கிள் ஓட்டப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.