Wednesday, April 29, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

தேர்தல் நடத்தப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான தேர்தலுக்காக சகல தரப்பினரும் தடையின்றி முன்னிலையாக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சர்வதேச போட்டி தடை நீக்கப்பட்டு, இலங்கை தேசிய காற்பந்தாட்ட அணிக்கு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles