Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுமுறைக்கு வந்து வீடுகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

விடுமுறைக்கு வந்து வீடுகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறைஇ கிதுலாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் புஸ்ஸ இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தவர் எனவும் விடுமுறை முடிந்து உரிய திகதியில் பணிக்கு சமூகமளிக்காதவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை, தூவா விகாரை வீதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து திருடுவது தொடர்பான முறைப்பாட்டின் பிரகாரம், முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேக நபர் சிக்கியுள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு அருகில் மடிக்கணினியொன்றை விற்பனைக்காக கொண்டு சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் நீண்ட நேர விசாரணையின் பின்னர் இரண்டு மடிக்கணினிகள், கையடக்கத் தொலைபேசி, இரண்டு பென் டிரைவ்கள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles