எரிபொருளை ஏற்றிச் செல்லும் பௌசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவற்றை தடுப்பதனால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய சேவைகள் உட்பட பிற விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.