Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் திணைக்களத்துக்கு சொந்தமான 42 வாகனங்கள் மாயம்

தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 42 வாகனங்கள் மாயம்

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தபால் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​இந்த வாகனங்கள் இல்லாதது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​இந்த வாகனங்கள் 30-50 வருடங்களுக்கு இடைப்பட்டவையாகும்.

இந்த வாகனங்கள் பற்றிய தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு பதிவேடுகளில் உள்ளதாகவும் ஆனால் தபால் திணைக்களத்தின் பொருட்கள் பட்டியலில் இல்லை எனவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles