Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடன்படிக்கை இலக்குகளில் 80% பூர்த்தி

IMF உடன்படிக்கை இலக்குகளில் 80% பூர்த்தி

செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நாணய சபையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பரில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முடிக்க உத்தேசித்திருப்பதாகவும், 48 மாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏனைய விநியோகங்களையும் முடிக்க இருப்பதாக அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகையில், சட்ட திருத்தங்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமூலங்களின் அடிப்படையில் 80 சதவீத இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளன.

பந்தயம் மற்றும் கேமிங் லெவி சட்டத்தில் திருத்தங்கள் ஒகஸ்ட் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

மீளாய்வுக்கு முன்னதாக கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles