ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளார்.
அதில் இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடை, தாம் மேற்கொண்ட தவறான தீர்மானம் என்பதை ஜனாதிபதி ஒப்பு கொண்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துக்கு இன்னும் முன்னதாகவே சென்றிருக்கலாம்.
இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை தவறானது. மீண்டும் இரசாயன உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றுக்கே உள்ளது. தேவையான அரசியல் யாப்பு மாற்றத்தை ஏற்படுத்த, நாடாளுமன்றுக்கு ஒத்துழைக்க தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.