நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 10இற்கு மேற்பட்டவர்களை கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
