சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றில் வைத்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.