ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகரவிடம் கேட்டபோது, அமைதியின்மை சீராகும் வரை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.