Monday, June 9, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு90,000 பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு

90,000 பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு

நீர்கட்டணம் செலுத்தத் தவறிய 90,000 பாவனையாளர்களுக்கு நீர்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மே மாத நிலவரப்படி சுமார் 8 பில்லியன் ரூபா நீர் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மொத்த நீர் கட்டண தொகையில் 7.1 பில்லியன் ரூபா நிலுவை, வீட்டு நீர் விநியோக பாவனையாளர்களால் செலுத்தப்படாமல் உள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் 32 மில்லியன் ரூபாவும், பொது நீர் விநியோகத்தில் 262 மில்லியன் ரூபாவும், தொழிற்சாலைகளில் 15 மில்லியன் ரூபாவும் மற்றும் அரச நிறுவனங்களில் 656 மில்லியன் ரூபாவும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles