தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் கடக்கவுள்ள நிலையில், பதவியேற்பு நினைவு கூறும் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்பு நினைவு கூறும் நிகழ்வை பல தரப்பினர் நடத்த கோரிய போதும் ஜனாதிபதி அதனை வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 20ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.