காதலியின் நிர்வாண புகைப்படங்களை பல நண்பர்களுக்குள் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காதலன் உட்பட 6 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் சம வயதுடைய பள்ளி மாணவி ஒருவருடன் உறவு கொண்டுள்ளதுடன், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே பிறந்தநாள் விழாவில் நண்பர்களுக்கு இடையே இந்த ஆபாச படங்களை பரிமாறியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் பல மாணவர்களுடன் படங்கள் பகிரப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 6 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.