Friday, August 1, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளை தேடி விசேட சுற்றிவளைப்பு

அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளை தேடி விசேட சுற்றிவளைப்பு

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 4 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பஸ்ஸொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 40-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles