தென் மாகாணத்தின் மூன்று பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அம்பலாங்கொடை, அஹுங்கல்ல மற்றும் மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளில் பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
