Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலைக்கான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிப்பு

தேயிலைக்கான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிப்பு

ஒவ்வொரு நூறு கிலோ கிராம் தேயிலைக்கான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21ஆம் திகதி பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, இலங்கை தேயிலைச் சபை சட்டத்தின் 13(01)(அ) என்ற உறுப்புரைக்கமைய விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியாக ஒவ்வொரு நூறு கிலோ கிராமுக்கும் 300 ரூபா அறவிடப்படும் என்ற ஏற்பாடு, ஒவ்வொரு நூறு கிலோ கிராமுக்கும் 400 ரூபா செஸ் வரி அறவிடப்படும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles