தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தை மாற்றி இன்றைய உலகத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான வரைவு சட்டமூலம் நேற்று (06) பிற்பகல் தொழிலாளர் ஆலோசனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள05 வருட சேவைக் காலம் மற்றும் 15 பணியாளர்கள் என்ற வரம்பையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்க வேண்டும் என்றும் புதிய தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்படவுள்ளது.
