Saturday, August 2, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்பில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு

மட்டக்களப்பில் இஞ்சி, பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு

மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்சமிளகாய் 1300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவும் விற்கப்படுவதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில்,

தற்போது பச்சை மிளகாய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ பச்சை மிளகாயை 1200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 1300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம்.

அதேவேளை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியை கொள்வனவு செய்ய முடியாத அளவிட்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கரட் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு 240 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles