Sunday, June 15, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் 49,759 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24,837 பேர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நாடளாவிய ரீதியில் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அதிக டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles