தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஜூலை 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய விலங்கியல் துறையின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி? ஜூலை 3 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சகல சிறார்களுக்கும் மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.