முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டிய போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்களின் மேலாடை, பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.