ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வழிபாட்டிற்கு பின்னர் ஆலயசூழலில் நின்ற முன்பள்ளி குழந்தைகள், வெளிநாட்டவர்களுடன் அவர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மைத்ரிபால சிறிசேன, அடுத்த 2 நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.