அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நாணயக் கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.